About Me

2012/06/10

நிலா நிலா ஓடி வா


நிலாவே
உன்னை பல நாட்களாய்
கண்காணிக்கின்றேன்!
ஏனின்னும்
உன்னால் அடைகாக்க முடிவதில்லை
குஞ்சு நிலவொன்றை - என்
பிஞ்சு விழியினுள் நுழைத்திட!

சேவலின் சிறகடிப்போடு
ஒளிந்து கொள்ளும் நீ
பகற்பொழுதின் வறட்சியில்
மறைந்து கொள்வதும் ஏன்!

உன் பருக்கன்னங்களை
ஒற்றியெடுக்க சேலை தருகின்றேன்!
பூமியின் செல்லப்பிள்ளையே
நாளையென் கையசைவு கண்டு
தரையிறங்கி வா வேகமாய்
எனக்கும் சேவகம் செய்திட!


- Jancy Caffoor-

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!