About Me

2012/06/11

தேசத்தின் மகுடம்



தேசத்தின் மகுடம்........
நெருஞ்சியின் சகவாசம் !

பயணக்கைதிகளாய் பல மணி- நாம்
பாதையோரம் வேரூன்றிக் கிடக்க.........
கண்காட்சி இன்பங்கள் யாவும்
கானலாய் வடிந்தோடும்!

வாகன நெரிசல்களால்..........
கோர தாண்டவமாடும் தெருக்கள்
பரவசப்படும் மக்கள் அவலம் கண்டு!

மகுடம் சூடும் புனித தேசம்
நள்ளிரவில் புன்னகைக்கும்
மக்களை மாக்களாக்கி!

வீதியோரக் காவலர்களென
தற்காலிக நியமனத்தில் நாம்
அங்கலாயிப்போம் நள்ளிரவில்!

பிரமிப்பூட்டும் மனித உழைப்புக்கள்
நிசப்த பொழுதுகளில்...........
வீணாகிக் கிடக்கும் வீதியின் விதியால்!

நாயின் குறட்டையில்........
மனித உறக்கம் தொலைந்து போகும்!
சேயின் பசி மயக்கத்தில்
தாய்மை பதறிக் கொள்ளும்!

கண்காட்சி அற்புதங்கள் - சில
அற்பர்களால்..........
நடுவீதியில் ஆவியாகிப் போக
அவலங்களின் முகத்தோடு நள்ளிரவு விடியும்!

மனித முணுமுணுப்புக்களும்....
சில சத்தியப்பிரமாணங்களும்..........
'சீல்' வைக்கும் மீள்பாராசையை!

'தயட்ட கிருள' இன்பம்...........
சன நெரிசலில் நசிந்து போக
நெஞ்சினில் வந்தமரும் அவலம்
மெல்ல உசிரை நசித்துக் கொல்லும்!



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!