About Me

2012/06/10

நீயே என் உயிராகி !


உணர்வுகளால் நெய்யப்பட்ட - என்
மனப்பாறையில்
உருகிக் கொண்டிருக்கின்றது
உன் முகம்!

சுகம் நனைக்கும் - உன்
விழி நெருடலில்
மயங்கிக் கிடக்கின்றது
என் ஆத்மா!

உன் வசீகரப் புன்னகையின்
சிதறல்களில் 
பொறுக்கியெடுக்கின்றேன் - என்
சந்தோஷத் தேடலை!

நண்பா- நீயேயென்
ஞாபகத் தெருக்களில்
காவலனாய்
பல கணங்களில் !

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!