About Me

2012/06/10

சுனாமி


புவி நரம்புகளை அடிக்கடி
அறுத்தெறிபவர்கள் யார்!

நிலத்தட்டுக்களின் முணுமுணுப்புக்களால்
அலையும் அலைகள்
வீழ்ந்து மடிகின்றன கரையில்
பெரும் வீச்சத்தோடிங்கே!

புவியைக் கழுவிவிடுமிந்த
கடற்கோளின் நீர்ப்பாய்ச்சல்
மிடுக்கோடு தரைக்குள் சமாதியாக்கும்
தடுக்கி வீழ்ந்த உடல்களைத் தானமாய்!

சாகரங்களின் சாகஸங் கண்டு
சரித்திரம் எழுதுகோல் ஏந்தும்!
இற்றுப் போன மனிதங்களை அவை
பக்குவமாய் பறை சாற்றும்!

வேலியில்லாக் கடலலைகள்- ஊரை
வேவு பார்க்க தலை நீட்டும்!
மாடங்களும் கோபுரங்களும்
விஷ நகையில் வீழ்ந்து மடியும்!

விஞ்ஞானத்தின் முன்னெச்சரிக்கைகள்
அபாய மணியாய் அலறிக் கிடக்கும்!
மூச்சடங்கும் தேசத்துள் -முழுச்
சுவாசமும் அறுந்து போகும்!

இயற்கையின் சீற்றம் கண்டு
விஞ்ஞானம் வீணே அதிர்வதுண்டு!
மறை தளந்ந்த மக்கள் கூட
இறை தஞ்சம் தேடுவதுண்டு!


- Jancy Caffoor-

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!