About Me

2012/06/11

ஆசை......ஆசை !


விண்கற்கள் பொறுக்கி
வண்ண வீடு கட்டணும் !
மின்குழிழாய் பொருத்த- அந்த
சூரியனை நிறுத்தணும்!

காற்றில் மெல்ல ஊஞ்சல் நெய்து
நாள் முழுதும் ஆடணும்!
பசி மெல்ல வந்துவிட்டால்
நிலாப் பீங்கான் தேடணும்!

வியர்வை முகம் தான் துடைக்க
மேகக் கைக்குட்டை வாங்கணும்!
முந்தானையாய் போர்த்திக் கொண்ட
வானவில் சேலை கழுவணும்!

கோள்களுக்கு "கோள்" மூட்டி
சீண்டிக் கொஞ்சம் பார்க்கணும்!
புவிப்பந்தை மெல்ல உருட்டி
விண்ணை முட்டச் செய்யணும்!

வான் நீலம் கழுவியெடுத்து
என் கதிராளி நிரப்பணும்!
தேன் சிந்தும் மழைத்துளியால்
சின்ன மாலை கோர்க்கணும்!

எந்தன் நெஞ்சின் எத்தனைஆசைகள்
அவையென்னை 
கட்டியணைக்கும் பேராசைகள்!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!