About Me

2012/06/11

அன்னைக்கு விண்ணப்பம்!


தொப்புள் நாண் இணைப்பேற்றி
கருத்தோப்புக்குள் நிழலிட்ட அன்னையே!
புண்ணாகி மென்னெஞ்சும் வலிக்குதம்மா
பிரிவனலில் மழலை மனம் துடிக்குதம்மா!

கடல் கடந்து உறவும் மறந்து- நீங்கள்
உழைக்கத்தான் சென்றீர்கள் - இருந்தும்
என் உணர்வுக்குள்ளும் ஊனம் நுழைத்து
ஊமையாகிச் சென்றீர்கள்!

காலடிச் சுவர்க்கம் நானும் காண - உங்கள்
காலடி தேடித் தவிக்கின்றேன் !
பல திங்கள் தான் கரைந்தும்- நீங்கள்
சிலையாகிக் கிடக்கின்றீர் எனை மறந்து!

கருவிலே எனையழித்தால் - இந்த
இடரேதும் இல்லையம்மா - எனை
விடமான வாழ்வுக்குள் விட்டுச் சென்றீர்
நானும் அனாதை தானம்மா!

சம்பிரதாயங்கள் நீங்கள் மறந்ததால்
சரித்திரமானேன் நானும் சகதியில்.....
என் மழலை கூடத் தொல்லையோ
 மன்றாடுகின்றேன் தாயே உங்களிடம்!

ஜன்ஸி கபூர் 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!