About Me

2012/08/08

உன்னுயிர் பற்றி


இருள் கிழித்து ...........
மௌனமாய் உருகும் நிலவெளியில்
மானசீகமாய் மயங்கிக் கிடக்கின்றன
நம் நினைவுகள்!

உன்னருகாமையில் - நான்
படர்ந்திருக்கும் - அந்த
நிசப்த தணலில் ............
பற்றியெரியும் தீயாய்
மோகித்துக் கிடக்கின்றது
நம்மன்பு!

விரல்களின் மோதல்களைத்
தவிர்த்திட மனமின்றி ...........
நம் மேனியோ
உஷ்ணத்தின் வெளிநடப்பால்
வெட்கம் தொலைத்து நிற்கின்றன
ஏக்கங்களை ரசித்தபடி!

எங்கோ.................
சிறகறுத்து வரும் தென்றல்
கொஞ்சம் முறைத்துச் செல்கின்றன
இடைவெளி மறந்த
நம் .............
இதழோரங்களைக் கண்டு!

நம்.......
உயிர் தள  மூச்சோரங்கள்
எகிறிக் குதிக்கின்றது
நேசத்துடன் வாசிக்கப்படும்
உணர்வுப் பரிமாற்றத்தின்
வீரியம் கண்டு!

சத்தமின்றி நம் சந்திப்புக்காய்
கை காட்டும் நாட்காட்டி
வெட்கத்தோடு ஒதுங்கிக் கிடக்கிறது........
இடையிடையே
தடையின்றி மோதும் நம்
முத்தச் சிலிர்ப்பில்!

கொந்தளிக்கும் அலை நடுவே
தத்தளிக்கும் சிறு மீனாய் ........உன்
அணைப்பினிறுக்கத்தில்
சிவந்து கிடக்கின்றேன்
விடுதலை தேடா கைதியாய்
மாறி!

உன் உயிர் பற்றி
உருளுமென்னுலகில் ......
கடிகார அலைவுகள்
நிதானித்தே செல்கின்றன
உன்னை.......
என்னுள்ளிடமாற்றும் வரை!




ஜன்ஸி கபூர் 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!