About Me

2020/06/25

எண்ணம் போல் வாழ்க்கை


அற்பமான வாழ்வுக்குள் அற்புத எண்ணங்கள்/
கற்பகதருவாய் வாழ்ந்திடலாம் பிறருக்கும் பயனாய்/
பெற்றோரைக் காத்திடும் பொற்கரங்கள் யாவும்/
போற்றப்படுமே சுற்றும் பூமியின் அச்சாணியாய்/

மனதின் நீட்சியே குணமாகிப் போகும்/
கனவும் வாழ்வின் தொடராகி மோதும்/
பகட்டினில் மதியிழந்து கடன்படும் வாழ்வும்/
அகத்தினில் துன்பம் ஊற்றிக் கரைக்கும்/

நன்றும் தீதும் நம்மையே தொடரும்/
என்றும் செயல்களே விதியாகிக் கூடும்/
சேர்க்கும் நட்புக்களும் நிறமாற்றிப் போகும்/
வார்த்திடும் நல்லவற்றால் மனிதம் பூக்கும்/

சித்தம் நிரப்பும் சத்தியம் நமதாக/
நித்தம் சூழும் உறவுகளின் இதமாக/
அன்பைப் பகிரும் நெஞ்சின் அரணாக/
இன்பத்துடன் வாழ்ந்திடலாம் புன்னகைகளைச் சுமந்தபடி/

ஜன்ஸி கபூர் 


  •  
     

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!