About Me

2020/06/23

விதியை வெல்வோம்



















பிசைந்த மண்ணும் பிள்ளைப் பருவமும்/
இசைந்திடும் வளைத்திடலாம் நம் எண்ணத்திற்கே/
அசைந்திடும் காற்றும் வசை பாடாதினி/
மாசைக் கரைத்திடும் உலோகங்கள் தொலைவில்தான்/

மதிநுட்பமும் கனவும் கலந்த கலவையாய்/
புதிய படைப்பைப் படைக்கும் பிரம்மனே /
துதி பாடுவோம் உழும் விரல்களுக்கே/
விதியை வெல்லலாம் பொக்கிஷங்கள் நீங்களே/

மண்ணை மிதித்ததும் நெகிழும் மனசாய்/
மன சித்தமே உயிர்க்கும் கோலங்களாய்/
சக்கரத்தில் வனையும்  கைநுட்பம் கொண்டே/
வாழ்க்கைச் சக்கரமும் வளமாய்ச் சுற்றிடுமே/

ஜன்ஸி கபூர்  


  •   

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!