About Me

2020/06/26

இசையின் துடிப்பு


இசையின் அதிர்வெல்லாம் உயிரை வருடுகையில்/
அசையும் சந்தங்களும் ஊற்றாய் உள்ளத்திலே/
மூங்கில் துளையோரம் மூச்சும் மெல்லிசையே/
சங்கின் அலைவுடனே காற்றும் துள்ளிசையே/

மழலை மொழியினில் மயங்கும் குயிலோசை/
தழுவி அணைக்கிறதே மனதும் சிரிக்கிறதே/
நழுவும் அருவியுடன் வீழும் மழைத்துளியும்/
அழகிய சங்கீதம் ரசித்திடும் நாதங்களே/

அன்றிலின் சிறகடிப்பில் சிந்துதே ராகமொன்று/
கொன்றலின் மின்னலுமே சுரமாய் வீழ்ந்திடுதே/
தென்றலின் கிசுகிசுப்பில் வெடித்திடும் மொட்டிலுமே/
இன்னிசை வாழ்ந்திடுமே மெட்டொன்றைத் தந்திடுமே/

சிட்டாய் சிறகடிக்கும் சருகின் ஓசையிலே/
பாட்டெழுதும் புல்லினங்கள் பரவசமாய் துள்ளிடுமே/
எட்டுத் திக்கெங்கும் ஈர்த்திடும் தமிழொலியும்/
திகட்டா அமிர்தமே இசையின் துடிப்பினிலே/

ஜன்ஸி கபூர் - 26.06.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!