About Me

2020/06/22

ஆனந்தம் பொங்குமே

 மேகம் உருகுதே தூறலாய்ப் பூக்கள்
மோகம் சிலிர்க்குதே விழிக்குள் கூதல்
வேகம் குறைத்தே சக்கரம் ரெண்டும்
தேகம் நனைக்குதே  காதல் மழைக்குள்

வெட்கம் உடைந்த பார்வைகள் பட்டே
வெட்டும் மின்னலும் தன்னையே மறந்ததோ
விருப்பத்தில் இணைந்த இதயங்களின் புன்னகை
அரும்புதே குடைக்குள் ஏக்கத்துடன் உயிர்த்தே

இடைவெளி மறந்த மூச்சின் துடிப்பில்
தடையின்றி வாழும் அன்பும் அணைத்தே
குடைக்குள் மயங்கும் சிட்டுக்களின் வாழ்வில்
மடைதிறந்த வெள்ளமாய் ஆனந்தம் பொங்குமே

ஜன்ஸி கபூர் 





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!