About Me

2020/07/27

வலி

சேயவள் முன்னாடி பெத்தவளும் பேயாக
வைகின்றாள் வார்த்தைகளால் பிஞ்சும் வெம்மிடவே
மெய்யினை மொய்க்கும் விரல் தழும்புகளுமே
பொய்யான வாழ்வின் சோகங்களோ குழந்தாய்

படித்திடென்றே அடிக்கின்றனர் ரசிக்கின்றனர் கண்ணீர்
துடிக்காத தாய்மை வெடிக்கின்றதே நெருப்பாய்
அழுதிடதே குழந்தாய் பழுதுமில்லா வாழ்க்கை
அன்பும் கொண்டேன் துடிக்கின்றேனுன் வலியில்

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!