About Me

2020/07/29

அற்புத வரமாய் நீ

 

இறைவனாலும்  பெறமுடியாத அற்புத வரம்
கருவறை சுமந்திடும் மழலையின் உயிர்ப்பே

துருவப் பனியில் செதுக்கிய சிற்பமே
திருமணப் பொக்கிசத்தில் உயிர்த்திட்ட நிலவே

கருவிலே உதைக்கும்  குறும்பினைப் பிசைந்தே
அருமைச் செல்வமாய் உயிர்த்தாய் உயிரினில்

திருமுக எழிலினில் விழிகளும் அழகே
இருளிலும் உந்தன் மழலையும் அமுதே

கருவாயி கண்டெடுத்த அற்புத வைரமே
திருநாள்தான் நீயெனக்கே வந்திட்டாய் அருகே

ஜன்ஸி கபூர்
 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!