About Me

2020/07/27

நினைவினில் நிறைந்தவனே

 
நெஞ்சில் நிறைந்தவனே நெசமாகத்தான் உன்னன்பில்/
தஞ்சமாகிப் போனேனே செவ்விதழும் தேனூற்ற/
அஞ்சவில்லை உந்தன் நிழலுமெனைக் காக்கும்/
பஞ்சமில்லை வாழ்வில் வசந்தமே நீயாய்/

நித்தம் என்னுள் துயிலைத் துகிலுரித்தவனே/
சித்தம் ரசிக்கும் உன்னைக் கண்டாலே/
சத்தமிடுகின்றதே வெட்கமும் உயிரைப் பிசைந்தே/
மொத்தமாய் உருகுதே தனிமையும் இனிமையாய்/

பறந்திடும் நொடிகளால் துறந்திடுமோ மெய்க்காதல்/
உறங்கிடும் இரவிலும் துணையுன் நினைவுகளே/
நறவாகிக் கசியுதே உன்னால் பொழுதெல்லாம்/
நல்லறமாய் இனித்தே நல் வரமுமானாய் /

பெண்மை போற்றிடும் உந்தன் பண்பாலே/
எண்ணம் உயர்த்தினேன் சிகரமும் தொட்டிடவே/
கண்டேன் உன்னில் அறமாய்க் காதல்/
கண்ணாளா வாழ்ந்திடலாம் காலமெல்லாம்  ஒன்றாகி/


ஜன்ஸி கபூர் 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!