About Me

2020/07/28

தூளியிலே ஆட வந்த நிலா

தூளியிலே ஆட வந்த நிலாவே/
தூங்கவிடாமல் தூண்டியிழுக்கிறே உந்தன் அன்பாலே/
பொங்கும் புதுப்புனலாக உரசுகின்றாய் உயிருக்குள்ளே/
மங்காப் புகழ் வருடும் மனசுமாகின்றாய்/

நித்தில மடிதனில் செந்தமிழ் சிந்திடும்/
முத்தின் சுடரொளியே கண்ணுறங்கு/
எத்திசையு மறிந்திடும் உந்தன் கலைப்பணி/
முத்துப்பேட்டை மாறனார்   வார்த்திட்ட தமிழ்ப்பணி/

வண்ணங்கள் பிழிந்தூற்றும் அழகெல்லாம் தலைப்பாகும்/
எண்ணங்கள் உரசிடும் விரலெல்லாம் எழுதுகோலாகும்/
கண்களும் கசிந்திடுமே மொழிக் காதலால்/
விண்ணும் வியந்திடுமே உந்தன் பேரழகால்/

ஆறின் அகவைக்குள் உயிர்க்கின்ற நிலாவே/
ஆனந்தமாக உதித்திடு ஆயுளெல்லாம் நீண்டிடு/
ஆரோக்கியமாய் வளர்ந்திடுவாய் அகிலமும் உன்னோடு/
ஆரத்தழுவுகிறேன் நிலாவே வாழ்ந்திடு பல்லாண்டு/

ஜன்ஸி கபூர்
 

 















No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!