About Me

2020/09/13

கிராமத்துச் சாரல்

 இயற்கையின் பசுமைக்குள் உயிர்க்கின்றதே கிராமமும்

இதயங்களின் சங்கமத்தில் உறவாடுகின்றதே பண்பாடும்

இன்பத்தின் கலவைக்குள் விழிக்கின்ற விடியலுக்குள்

இலயிக்கின்ற அமைதியும் சிறகடிக்குமே உணர்வினில் 


முற்றங்களில் வரைகின்ற கோலங்களின் ஈர்ப்பினில்

சுற்றிடுமே தென்றலும் வசீகரத்தில் நனைந்தே

சுற்றத்தின் அன்பினில் சுகமாகும் வாழ்வுக்குள்

ஏற்றமும் கண்டிடுவார் எளிமையின் முகவரிக்குள்


வயலின் புன்சிரிப்பில் குலுங்கிடுமே மணிகள்

அயராத உழைப்பினிலே இசைந்திடுமே மனமும்

பயன் மரங்களெல்லாம் அழகின் செழுமையினில்

படர்கின்றதே கலப்படமில்லாத எழில் வாழ்வும்


கிராமத்துச் சாரலின் இயற்கை அழகினை

இரசிக்கின்ற விழிகளுக்குள் கோடி இன்பமே

வீசுகின்ற தென்றலில் சாய்கின்ற பயிர்களெல்லாம்

இசைக்கின்ற நாதமும் செவிக்குள் நல்லிசையே


ஜன்ஸி கபூர் 





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!