About Me

2020/09/17

இரட்டைக்கிளவி

மாணவன் மடமடவென பாடங்களை எழுதிட/

ஆசிரியர் கடகடவென பாடங் கற்பித்தார்/


இடைக்கிடையே விறுவிறுப்பான கதைகளும் சொல்லுகையில்/

வெடவெடவென நடுங்கியதே  தேகமும் எனக்குள்/


தரதரவென கதிரையை இழுத்தேன் நானும்/

நறுக்நறுக்கென பற்களைக் கடித்தாரே ஆசிரியரும்/


மன்றத்தில் தோழியின் கலகலப்பான பேச்சும்/

தைதை ஆட்டமும் கவர்ந்ததால் ரசித்தேனே/


இடைவேளை வந்ததும் மொறுமொறு முறுக்கினை/

மொச்சுமொச்சுவென சாப்பிட்டேனே பசியையும் தணிய/


கசகசவென தேகம் ஊறிய வியர்வையும்/

சிலுசிலுவென வீசிய காற்றில் கரைந்ததே/


ஜன்ஸி கபூர்





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!