மழைத் தோரணங்கள் அழகின் ஆபரணங்கள்;
தவழுதே தரணிப் பந்தலின் அலங்காரங்களாய்
பருகிடும் விழிகளில் எழிலின் கலவை
பரவசத் துடிப்பினில் ஈரத்தின் சாயல்
இன்ப ரசிப்பினில் களிக்கின்ற விரல்களும்
இதமாக அசையட்டுமே இங்கு கவியாத்திட
காத்திருக்கின்றோம் உங்கள் கற்பனைக்குள் ஊற்றெடுக்கின்ற
அனுபவங்களையும் சுவைத்திடவே
வாருங்கள் கவியுறவுகளே கவியெழுதலாம் அழகாக
18.09.2020

No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!