About Me

2020/09/17

ஏழையின் குடிசையில் ஒளி விளக்கு

ஞானத்தை வழங்கிடும் நற் கல்வியை

ஞாலத்திலும் தடுத்திடுமோ வறுமை இருளும்

அறியாமை அகற்றியே அறிவினை ஏற்றிடவே

அனைவரும் கற்பது உரிமையே அகிலத்தில்


ஏழ்மைத் தணலும் வீழ்த்திடும் மனங்களும்

ஏக்கத்தினில் நொறுங்கி வருந்துதல் சாபமோ

ஏற்றத்தை வாழ்வில் ஏற்றிடும் ஒளியாக

எல்லோர் எண்ணத்திலும் இசைந்திடுமே கல்வியும்


உதரம் துடித்தாலும் உணர்வும் ஏந்திடும்

உயர்வான திறன்களை உருவாக்குமே கல்வியும்

உன்னத எதிர்காலம் உதயமாகுமே திறமையால்

உயர்வுக்கும் என்றுமே தடையில்லையே வறுமையும்


கற்பதற்கு ஆர்வமும் முயற்சியும் இருக்கையிலே

ஆற்றலும் ஆளுமே நம் வசமே

ஏழைக் குடிசையின் ஒளி விளக்காக

ஏற்றிடும் கல்வியால் எதிர்காலமும் சிறக்குமே


ஜன்ஸி கபூர்  








No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!