About Me

2020/09/17

என்னவளே

 

ஏந்துகின்றேன் உனையே எந்தன் ஆசைக்குள்ளே/

ஏக்கங்கள் வெடிக்கின்றதே உனையே காண்கையிலே/

ஏந்திழை உனையே உயிருக்குள் உருக்குகையில்/

எனையும் தொடுகின்றதே உந்தன் புன்னகையும்/

 

உந்தன் விழிகளில் மொய்த்திடும் கனவுகளை/

எந்தன் மனமும் உரசி ரசித்திடவே/

பருவத்தின் நூலிழையில் பறக்கின்றேன் உன்னோடு/

கரும்பைப் பிழிந்தூற்றி நனைக்கின்றாய் என்னுயிரையே /  


இதழ்களின் விருந்தோம்பலில் சிலிர்க்கின்ற தேகமும்/

இதயத் துடிப்பினில் வருடுகின்றதே தித்திப்பை/

மையிடும் கண்களும் சந்தனத் தேகமும்/

பொய்யில்லா அன்புக்குள் வெட்கத்தில் சிவக்குதே/


உந்தன் தரிசனத்தினை நுகர்ந்திடும் பார்வைக்குள்/

உரிமை பெறுகின்றதே வனப்பான அன்பும்/

உறங்கிடாத நினைவுகளும் அலைகின்றதே நிழலாக/

உணர்ச்சியின் மையத்தில் வீற்றிருக்கின்றாய் இராணியாக/


எந்தன் சுவாசத்தினுள் விட்டுச் செல்கின்றாயே/

உன் அழகான வாசனையைக் கவிதையாக/

என்னையும் மொழிபெயர்க்கின்றேன் தினமும் தனிமைக்குள்/

எனக்குள் என்னையே அடையாளமிடுகின்றாய் அன்பினாலே/


ஜன்ஸி கபூர் - 17.09.2020

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!