About Me

2020/09/17

குவளை கவிழ்ந்து நிலனோக்கும்

 

மெய் யின்பம் உருக்கும் மேனிக்குள்/

சாய்க்கின்ற அற்புதக் காதலினை நுகர்ந்த/

தலைவன் நினைவுக்குள்ளே உயிர்க்கின்றாள் தலைவியும்/

அலைகின்ற உணர்வுக்குள் திகழ்கின்றாள் பேரழியாக/


நேச விழிகளின் இரசிப்பில் உறைந்திட்ட/

நெஞ்சக் காதலனும் காண்கின்றான் குவளையை/

அஞ்சாது விண்ணோக்கி நிமிர்ந்திடும் மலரிது/ 

மிஞ்சிடுமோ என்னவள் விழி அழகினில்/   


பல்லிதழ் விரிந்திருக்கும் நீல அல்லியே/

பார்க்கவில்லையே என்னவள் கூர்விழியை நீயும்தான்/

உனக்கும் பார்க்கும் திறனிருந்தால் உணர்ந்திடுவாய்/

உயிர்க்கும் விழிகளும் ஏந்தியிருக்கும் அழகினை/


நிமிர்ந்த நின் இதழ்களும் நாணியே/

தலைசாய்க்குமே தோல்விக்குள் உனையும் வீழ்த்திடுமே/

அறிவாயோ தலைவியின் விழி எழிலை/ 

அவனியும் வியந்திடவே எடுத்துரைத்தான் தலைவனும்/


ஜன்ஸி கபூர் - 17.09.2020




 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!