About Me

2020/11/01

குடும்பம் ஒரு கதம்பம்


விழுதுகளாய் உறவுகள்  தாங்கிடும் குடும்பமும்/

பூத்திடும் கதம்பமாக பூரித்திடும் வாழ்வும்/

விரிகின்ற பொழுதெல்லாம் விதைக்கின்ற அன்பினால்/

கரைந்தோடும் சலிப்பும் கனிந்திடும் உணர்வுகளும்/


பெற்றிடும் இன்பம் பற்றிடும் மனதை/

பெருங்கிளையாகத் தாங்கிடும் பெரும் அனுபவங்களும்/

பெரும் பாக்கியமே பெரியோர் அரவணைப்பும்/

பொருந்தி வாழ்தலில் சுற்றங்களும் வாழ்த்தும்/


இடர்கள் தோன்றுகையில இதமாக வருடிடும்/

பாச வெளிதனில் படர்தல் சுகமே/


ஜன்ஸி கபூர் - 05.11.2020

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!