About Me

2020/11/03

பூஞ்சோலை


செவ்விதழ் விரித்தே 

.......செதுக்கும் குரலினில்/

சொக்கித்தான் போனேனே 

......என்றன் சோலைக்கிளியே/


பக்கத்தில் உனையிருத்தி 

........வாழ்கின்ற வாழ்வினில்/

தினமும் காதல் 

........வாசம் வீசுதே/


ஜன்ஸி கபூர் - 7.11.2020

------------------------------
இணைக்கின்றேன் அன்பே உன்னை வாழ்வில்
இதயத்தில் மகிழ்வேற்றி உலாவுகின்றேன் நிதம்
இன்னலும் தடைகளும் புயலென மோதுகையில்
வலிக்குள் மூழ்காமல் காக்கின்றாய் என்னையே

ஜன்ஸி கபூர் - 13.11.2020
-------------------------------------------------------------- 

5.  நினைவெல்லாம் நீயே
************************** 
காலம் ஓடிக்கொண்டேதான் இன்னும் இருக்கின்றது/
ஆனால் நீயோ என்னிலிருந்து தொலைவாகின்றாய்/

தினமும் உன்னை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்/
விரல்களால் என் கண்களைக் குத்துகின்றாய்/

வலிதான என் வலி புரிந்துமா/ 
மௌன முடிச்சுக்குள் ஒளிந்து கொள்கின்றாய்/

தவிப்புக்கள் நீள்கின்றன உனை நோக்கியதாக/
நீயோ தரிசனப் பாதைகளை மறைக்கின்றாய்/

என் கண்ணீரும் தீண்டாமல் காக்கின்றேன்/
விழிக்குள் விம்பமாக மலர்ந்திருக்கின்ற உன்னை/

இருந்தும் காத்திருக்கின்றேன் நீ வருவாயென/
உனதான நினைவுகளைப் பத்திரமாகச் சேமித்தபடி/

ஜன்ஸி கபூர் - 14.11.2020
-------------------------------------------------------- 
6. பண்பாட்டு வாழ்க்கை
***********************
பண்போடு வாழ்ந்திடும் வாழ்வில் என்றுமே/
இன்பமே பெருகும் மனமது மகிழும்/
உறவும் ஊரும் இணைந்தே வாழ்த்தும்/
வரலாறும் நம்மை இணைத்தே பேசும்/

ஜன்ஸி கபூர் - 16.11.2020
-------------------------------------------------------- 




நம்பிக்கை வாழ்வு
-------------------------
நம்பிக்கை கொள்வோர் வாழ்வில் தோற்கார்/
தெம்புடனே ஏற்பார் வாழ்வியல் போராட்டங்களை/
துன்பமும் தடைகளும் தகர்த்தே வெல்வார்/
அன்பும் அறமும் கொண்டே வாழ்ந்திடுவார்/
ஜன்ஸி கபூர்
----------------------------------------------------------------------------------


Azka Sathath
வாழ்ந்திடுவார் என்றுமே சுக வாழ்வினை//
செய்திடுவார் நற் செயல்கள் பல//
வென்றிடுவார் இலக்கு வழிப் பயணங்களை//
கண்டிடுவார் தினம் அன்பான உறவுகளை//
அஸ்கா சதாத்
--------------------------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!