About Me

2012/07/29

ப்ரிய சகி!



ப்ரிய சகி!

சந்தனங் குலைத்த உன்
மதி முகத்தில் ..................
வீழ்ந்து தெறிக்கும் புன்னகைகளை
களவாய்ப் பொறுக்கி பதிக்கின்றேன் - என்
இதழோரங்களில்!

எத்தனையோ எதிர்பார்ப்பு - நம்
இம்ஷைகளில்.....................!
என்னுள் வீழ்ந்து தவிக்கும்
தனிமையிலுன் விம்பம் மட்டுமே.........
தரித்துச் செல்கின்றதென்
மனவெளியில்

என் வீட்டு ஜன்னலோரமாய்
அடிக்கடி வீழ்ந்து கிடக்கும் உன்..................
அசைவுகளில்
இதிகாச காதலுணர்வுகளை
சேகரித்துக் கொண்டேன் !
நாளைய நம் வரலாற்றிற்காக!

என்னை நீ பார்க்கும் ஒவ்வொரு
நொடிகளும்...............
என்னுயிர் உனக்குள்ளல்லவா
ஒளிந்து கொள்கின்றது  சகீயே!


ஜன்ஸி கபூர் 














No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!