About Me

2012/07/29

ஆதவன்


பகல் நேர வான் முட்டையின்
மஞ்சட்கரு!

நீலப் பட்டாடையில்
பதிக்கப்பட்ட  தங்கக் கற்கள்!

பால் வீதியைக் காவல் காக்கும்
ஒளி வீரன்!

வானில் தவறிவிடப்பட்ட
தங்க நாணயம்!

ஒளித் தூரிகையால்
வரையப்பட்ட  ஓவியம்

தன் முகம் பார்ப்போரைச்
சுட்டெரிக்கும் தீப்பந்தம்!

அகில உற்பத்திக்கு
படைத்தவனிட்ட கரு!

இருளானின் நெற்றியில்
யாரிட்டார்  இச் சந்தனம்!


-Jancy Caffoor -




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!