About Me

2012/07/29

உலக ஊடக சுதந்திர தினம்



மே - 3
--------  ஒருவர் தன்  மன எண்ணங்கள், செயல்களை அவ்வாறே வெளிப்படுத்தும் தன்மையை "சுதந்திரம் " என்கின்றோம்..இச்சுதந்திரப் போக்கு தடைசெய்யப்படும் சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் வெடிக்கின்றன. அவை குடும்பம், மதம், சமூகம், நாடு, இனம், மொழி என விரிவுபடுத்தப்படுகின்றது.

இச்சுதந்திர தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகமாக "மனித உரிமைகள் சாசனம்" விளங்குகிறது. மனித உரிமை சாசனம் 19 ல் பேச்சுரிமை வலியுறுத்தப்படுகின்றது. 

இந்த வகையில் சுதந்திரமான ஒருவர்        தடையின்றி தனது கருத்தை தெரிவிக்கும் உரிமையுள்ளவர் என்பதை உலகெங்கும் பறைசாற்றும் விதமாக "உலக ஊடக தினம்" அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனித மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமானதே தொடர்பாடல். ஆரம்ப காலத்தில் "தீமூட்டல்" மூலம் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட மனிதர், பின்னர் சீனர்கள் காகிதங்களைக் கண்டுபிடித்ததன் விளைவாக கடிதம், தந்தி, பத்திரிகை மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர்.
இன்றைய நவீன காலமோ இணையம், மின்னஞ்சலாக மாற்றப்பட்டுள்ளது.

பல்வேறு கோணங்களிலிருந்தும் தகவல்களைத் திரட்டி அவற்றுக்கு உருவம் கொடுப்பவர்களே பத்திரிகையாளர்கள். ஆனாலின்று பத்திரிகைச் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட நிலையிலேயே உலக ஊடக தினம் முன்வைக்கப்படுகின்றது..

எத்தகைய நெருக்கடியிலும் மக்களுக்கு நடுநிலையான செய்திகளை பத்திரிகைகளினூடாக வழங்க வேண்டியது பத்திரிகையாளர்களின் கருத்தாகும். ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை இப் பத்திரிகைக்குண்டு.

நவீன தொடர்பாடலின் வளர்ச்சியும், பன்முகப்படுத்தலும் , ஆக்கிரமிப்பும் இன்றைய கால பத்திரிகைத்துறைக்குச் சவாலாக அமைந்தாலும் கூட, அதற்கீடுகொடுத்து செயற்படும் பத்திரிகைத்தறை சார்பானவர்களின் முன்னெடுப்புக்களால் பத்திரிகைத்துறை காலாவதியாகிவிடவில்லை. ஆரோக்கியமான செய்தி தாங்கலுடன் எம் கரங்களைத் தழுவியே நிற்கின்றது.




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!