About Me

2012/07/30

கவி தந்து போனவனுக்காய்


பல கவி என்னுள் தந்த
உனக்கான கவித் தூதிது!

எல்லாம் எனக்கே தந்து நின்றாய்
ஏனடா !
என்னை மட்டும் எடுத்துச் சென்றாய்!

உன் எண்ணங்கள் எனக்குள்
ஆவணங்களாகும் பொழுதொன்றில் 
ஓசையின்றி நகர்ந்தாய் - மன
அசைவின் உயிர்ப்பைக் கரைத்த படி!

நெஞ்சுக்குள் உன் ஏக்கங்கள்
இம்சைகள் செய்ய 
ஊனமாகிக் கிடக்கின்றேன்
யாருமற்ற தனிவெளியில்!

உன் தெருக்களில் விழும் - என்
காலடித் தடங்களை உனக்காக
விட்டு வருவேன் 
என் நேசத்தின் நினைவாகச்
சேகரித்துக் கொள்!

அம்சமான உன் முகமும்
அழகானவுன் புன்னகையும்
தொட்டுச் செல்லும் - என்
ஞாபக வேலியை என்றும்
நெசமாய் கட்டியாளும்!

உன் உணர்வுச் சோலையில்
எனைக் கிடத்தி
நீ நெய்த பஞ்சனைக்குள் நானே
தீ வார்த்தேன்
அன்புத் தீவிரவாதியாகி!

பிரிவில் தான்டா புரிதலும் !
முட்களாய் நானுன்னைக் கிழித்து
வழிந்த செந்நீரை 
கண்ணீராய்த் துடைத்தேனோ !

வலி மட்டும் மிஞ்ச
வழி பார்த்து நிற்கின்றேன் - உன்
மீள வரவிற்காய்!


ஜன்ஸி கபூர் 





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!