About Me

2020/07/19

காதலெனும் மலர்வனம்

காதலெனும் மலர்வனத்தின் காத்திருப்பு நாமாக
கசிந் துருகும் அன்பி லிணைந்தே
கனிந்திருக்கும் நறுஞ்சுவைக் கனிகள்
காலத் தேய்விலும் உதிரா நறுமலர்கள்

இதழ் கசியும் கற்கண்டுச் சாறெடுத்தே
இதயம் நனைத்தோம் இன்னுயிர் வருடி
இசைந்திட்ட என் விழியே உன் மொழியாய்
இணைத்திட்டாய் என் பருவச் சுவையினில்
       
மொட்டென நீளும் உன் விரல்கள்
பட்டாலே தேகம் நனைக்கும் பனித்தூறல்
கட்டுடலும் கற்பைச் சிதைக்கா அறமாக
தொட்டுணர்வேன் நானும் காமம் தீண்டாக் காதலால்

ஜாதி மல்லிகை சூழ்ந்திடும் குணமே
சாதி மறந்தே இணைவோம் வாழ்வில்
ஓதி ஒழுகும் நல்லறமே நமதாய்
சோதி ஒளிர்வில் சேர்ந்திருப்போம் நாமே

ஓளி உமிழ்வில் மலரும் மென்மலராய்
ஓர விழி மலர்வாய் என் நிழல் கண்டே
வாசம் வீசும் நறுமணமே – நம்
வாழ்வில் இனி என்றும் வசந்தமே

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!