About Me

2020/07/23

விடியாத பொழுது

விடியாத பொழுதெல்லாம் விதியின் சூழ்ச்சியோ/
துடிக்கின்றனர் மாந்தரும் இழிகுணம் கண்டே/
கடிவாளமில்லா ஆசைகளும் வெடித்திடுமே பேராசைகளாய்/
மனசு முணர்ந்திடும் திருப்தியற்ற வாழ்வுதனை/

சுரண்டும் கரங்கள் உயர்த்திடும் கோபுரங்களை/
வரட்டும் ஏழ்மைக்குள்ளும் துகிலுரிக்கும் கையூட்டுக்காய்/
ஈரமில்லா நெஞ்சுக்குள்ளும் திரளும் சுயநலத்தால்/
மரத்திடும் மனிதமே மற்றோரெல்லாம் இருட்டிலே/

திட்டமிடா வாழ்வும் கடனேற்றும் மலையளவு/
வாட்டத்தின் வலிமைக்குள்ளும் உதிர்ந்திடும் வனப்புமே/
தட்டிக்கேட்கார் உழைப் புறுஞ்சுவோர் அநீதியை/
வட்டமிடும் பொழுதெல்லாம் விடியலும் மறக்குமே/

விரலளவே முட்டட்டும் நமக்குள்ளே எதிர்பார்ப்பும்/
வீணாகாமல் பொழுதெல்லாம் நலமாகட்டும் இனிதாகவே/
வாழ்வும் தன்னியல்போடு பொருந்திப் போனால்/
விடியாத பொழுதெல்லாம் விடிவெள்ளிகள் ஆளட்டும்/

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!