About Me

2020/09/21

சிந்தனை செய் மனமே

சிந்தனை செய்தல் பகுத்தறிவின் ஆளுகை/

நிந்தனையை விலக்கிடும் தாரக மந்திரம்/

மாற்றத்தின் மூலவேர் மனதின் அலாரம்/

ஏமாற்றம் வீழ்த்திடும் சக்தியின் ஆதாரம்/ 

 

வருடுகின்ற கனவுகள் கண்ணாடிச் சிதறல்கள்/

வருந்துமே மனமும் எதிர்பார்ப்பின் உடைவில்/

தேடிய பொருளும் அழிவின் ஆழிக்குள்/

நாடிய செல்வமாக அரணாகும் அறமே/ 


ஒளிர்கின்ற தன்னம்பிக்கை ஒழித்திடும் சோர்வினை/

களிப்பின் இசைவினில் கலியும் கழறுமே/

இலக்கில்லா செயலுக்குள் இல்லையே வெற்றியும்/

இணைகின்ற கூட்டுறவில் இதயமது வலிமையில்/


சுற்றிடும் பூமிக்குள் பற்றிடும் பந்தங்கள்/

வெட்டினாலும் சிதைந்திடாத உன்னத உறவுகள்/

அற்ப பூமிக்குள் அனலெடுக்கும் ஆசைகள்/

அவலப் பிழம்பினுள் எதிர்காலம் புதைத்திடும்/


உதட்டின் தீ உருக்கிடுமே உயிரை/

உன்னத தேகத்தினுள் துளையிடுமே மரணம்/

உயிரை உருக்கும் துயரைப் பிடுங்க/

உள்ளத்தில் உறைந்திருக்கு அற்புத எண்ணங்களே/


ஜன்ஸி கபூர் - 21.09.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!