About Me

2020/10/03

பூஞ்சோலை கவிதைகள்


  கவியுலகம் 

கவியுலகம் அணைக்கின்ற கவியுறவுகள் அகத்தினிலே/

களிப்பும் தழுவுகின்றதே கவிகளை வார்க்கையிலே/

சிந்தைக்குள் உணர்வூட்டி சிந்துகின்ற படைப்பினிலே/

வந்தமரும் கற்பனைகளின் மடியிந்தப் #பூஞ்சோலை/


 விழியே கவியெழுது

 விழியே என்னில் மொழிகின்றாய் உன்னையே/

நழுவுகின்றாய் நாணத்தால் நினைவினை வருடியபடி/


தழுவுகின்றாய் மனதினை நீயென் உயிராகி/

அழகியே அன்பால் எனக்கும் கவியெழுது/  

 

 ஆதியும் அந்தமும்
 
நீ வருவாயென தவிப்புடனே காத்திருந்தேன்/
விழிகளும் சோர்ந்தன உன்னுருவைக் காணாமல்/
உன்றன் நினைவினில் சுழன்றது மனமே/
ஏன் மறந்தாயோ சோகத்துடன் நானிருந்தேன்/
 
 ஆதியும் அந்தமும்
 
அன்னை தந்த அழகிய வரமாக/
மாண்பான வாழ்வை மனமது காணும்/
இடரினைக் கலைத்தே இன்பத்தை நிறைத்திடும்/
அன்பு உறவினைப் போற்றியே வணங்குவோம்/

 
 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
 வான்இன்று அமையாது ஒழுக்கு
 
காண்கின்ற உலகும் நிலை பெற்றிட/
வான்மழை வேண்டும் உயிர்களும் உயிர்த்திட/

பெய்திடும் மழையால் பெருகிடுமே வளங்கள்/  
தோன்றிடும் நல்வாழ்வில் சேர்ந்திடுமே நல்லொழுக்கமும்/  


 
 ஆதியும் அந்தமும்  
 
பள்ளி தந்த அழகிய அனுபவங்கள்/
துள்ளி வருமே வாழ்நாள் முழுதும்/
அள்ளியணைத்தால் நெஞ்சும் இனித்திடும் நினைவுகளால்/
அந்த வாழ்வுக்குள் இணைந்திடத்தானே ஆசை/
 
 
 

 






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!