About Me

2012/07/30

அழகி


என் தனிமைச் சாரளமுடைத்த புள்ள
துணிச்சலாய் நெஞ்சுக்குள்ள வந்தாள் மெல்ல!
இனிமையைப் பூசிப்புட்டாள் உள்ளே
இனி தூக்கமும் வராது அல்லோ

மாதுளைச் சாறின் உதடு கண்டாள்
வார்த்தைகளில் மதுவும் தந்தாள்
போர்வையாய் உசிரில் நின்றாள்
பார்வையால் எனைத் தாங்கிக் கொண்டாள்!

தன் செம்பருத்தி விரலிலே
என் ரேகையை பதித்து நின்றாள்
அவள் மெல்லிய ரோசாச் சொண்டில்
என் பெயரை மொட்டாக்கி கோர்த்துப்புட்டாள்!

தன் கால் கொலுசின் ஓசையிலே
என் காதலையும் கொஞ்ச விட்டாள்........
ஆளு யாருமற்ற தோப்பினிலே
ஆறடி கூந்தலால் என்னைக் கட்டிப்போட்டாள்!

காற்றில் தன் சேலை நழுவுகையில்
காட்டி நின்றாள் தன் வெட்கத்தைக் கொஞ்சம்...........
காற்றோடுரசும் நாற்றுக் கண்டு
காதலோடு எனையும் சேர்த்தணைத்தாள்!

ஆற்றில போகுது உன் கண்ணு மீனாய்
என் ஆத்துக்குள்ள எப்ப வாற மீனா
என் பாட்டுச் சொல்லும் சங்கதியென்ன புள்ள
தாளம் போட நீயும்  வாடி மெல்ல!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!