About Me

2020/07/23

மெய்க்காதல்


அந்தாதி கவிதை
-----------------------
பனித்துளிகள் படர்கின்றனவே உன்னை நினைக்கையில்/
நினைக்கையில் வீழ்கின்றாய் கனவெல்லாம் சுகம்தானே/
சுகம்தானே கண்ணே உயிரும் தேடுகிறதே/
தேடுகிறதே நிழலும் உன் பாதையினை/
பாதையினை வகுத்தே வாழ்ந்திடுவோம் நலமாய்/
நலமாய் வாழ்ந்திடவே துடித்திடுமே மனதும்/
மனதும் தவித்திடுமே நீயென்னைப் பிரிந்தாலே/
பிரிந்தாலும் சேர்ந்திடுமே நம் மெய்க்காதல்/

ஜன்ஸி கபூர் - 24.07.2020
யாழ்ப்பாணம்


2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!