About Me

2020/07/25

குறளுக்கு கவிபாடு

குறள் :- 15

கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கேஃ
எடுப்பதூம் எல்லாம் மழை

வரண்ட மேகங்கள் வந்திங்கு போக
வாழ்வும் பஞ்சத்தில் மோதித் தவிக்கும்
வறுமை நீக்கி கெட்டார்க்கும் துணையாய்
வந்து பொழியுமே நல் மழையிங்கு


வசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே 
பசும்புல் தலைக்கண்பு அரிது. 

பெய்திடும் மழையும் பொய்த்திட்டால் புவியில்
பெருமரங்கள் ஊன்றாதே நிலத்தோ டுயிர்த்தே
பெருஞ் செல்வமாம் வாழ்வும் சுருங்கிட
ஓரறிவுப் புல்லினமும் வாடுமே பசுமையிழந்து

 
குறள் :- 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி  
தான்நல்கா தாகி விடின். 

மேக முறிஞ்சும் கடல் நீரெல்லாம்;
மேதினில் மழையாய் வீழ்ந்திடாத பொழுது
வருந்தித் துடிக்குமே கடல்வாழ் உயிரெல்லாம்
வற்றியும் போகுமே பெருங்கடலும் வளமின்றி

ஜன்ஸி கபூர்

2 comments:

  1. அருமை சகோதரி  பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் நன்றிகள்

      Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!