About Me

2020/07/23

குச்சுவீட்டுத் திண்ணையோரம்


குச்சுவீட்டுத் திண்ணையோரம் ஆசை/
மச்சானும் காத்திருக்கேன் நெடு நேரம்/
அச்சமேனே அஞ்சு நிமிசம் பேசிடலாம்/
பச்சப் புள்ளையே புரிஞ்சுக்கடி மனசத்தான்/

வளைஞ்சோடும் நதியோரம் நீ நடக்கையிலே/
வளையல் சத்தம் கலகலக்குதடி காதோரம்/
வைரமே உருக்கிறியே என் மனசத்தான்/
வைகைக் காற்றே கிள்ளாதே நினைவைத்தான்/

மை தீட்டும் விழியாலே மயக்குறே/
தை மாசம் வாறேன்டி வீட்டோரம்/
கை வீசி நடக்கையில மனசள்ளுறியே/
வையடி சீக்கிரம் கல்யாணத் தேதியத்தான்/

மொய்க்கிறே வண்டாட்டும் மனதைக் கிள்ளித்தான்/
பொய்யாக சினந்துகிட்டே சிவக்கிறே அழகாக/
சாய்ந்தாடும் மலரே உன்னிதழ் அமுதாக/
காய்ந்த பூமியின் தேவதை நீதானடி/

ஆலமர விழுதிலே ஊஞ்சலும் ஆடுவோமா/
ஆசை நெலவும் ரசித்திடப் பாடுவோமா/
ஆனந்தத் தித்திப்பிலே உசிரும் இசைந்தாட/
ஆருயிரே காத்திருக்கிறேன் உனக்காக/

ஜன்ஸி கபூர்
 





2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!