About Me

2020/09/11

வீரம் விளைந்த மண்

வீரம் விளைந்த என் மண்ணிலே

விழுந்தன உடல்கள் எழுந்தன விதைகளாய்

விழுமியம் சிதைந்திடாத அறப் போரின்

அழகிய தடமாக உருமாறியதே தேசமும்


வெந்த ரணங்களின் வடுக்கள் எழுச்சிகளாய்

வெற்றியின் முரசினில் இசைந்ததே வரலாற்றில்

பகைதனை விவேகத்துடன் விரட்டிய துணிவும்

வாகையின் வாசத்தில் தாயகத்தின் வாசலோரம்


நெஞ்சின் வலிமையில் வஞ்சகப் பகையினை

அஞ்சிடாமல் துரத்திய தீரத்தின் விளைநிலமாக

சிந்திய உதிரமும் சிந்தையின் விடுதலையாக

சிரிக்கின்றதே எந்தன் மண்ணும் பாரினுள்


ஜன்ஸி கபூர்  




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!