About Me

2014/07/25

முகநூல்த் துளிகள் - 3




தோற்றுப் போகும் கணங்களில்
தொற்றிக் கொள்ளும் கண்ணீர் - நம்
வெற்றிப் பாதைக்காகத் தௌிக்கப்படும்
பன்னீர்!

-----------------------------------------------------------


நேற்றைய பொழுதுகளில்....
உன் தரிசனமின்றி
வெறிச்சோடிப் போன என் பக்கங்கள்

இன்று..

கைகுலுக்கின்றன புன்னகையுடன்
உன் மீள் வரவுக்காய்!
-----------------------------------------------------------


உன் பலமெல்லாம்
என் மீதான அன்பால்....
குழந்தைத்தனமாகின்றது!

உன் .....
குழந்தைத்தனமும்
குறும்புத்தனமும்

நான் ரசிக்கும் கவிதைகள்!
----------------------------------------------------------------------------


வாய்ப்புக்கள்....!

நம் வீட்டு வாசற்படிகளல்ல நமக்காக எப்போதும் காத்திருக்க..
வந்து போகும் முகிற் கூட்டங்கள்!!

வாய்ப்புக்களை நாம் தவற விடும்போது நமது முன்னேற்றங்களும் பின்னோக்கி விடுகின்றன..

எனவே .......

வாய்ப்புக்களை நாம் தவற விட்டாலும்கூட, நல்ல வாய்ப்புக்கள் நம்மைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்போது, அதனைப் பற்றிப் பிடித்தல் வேண்டும்...

-----------------------------------------------------------------------------


பெண் ஓர் புத்தகம்...
அவளிடம் பல உணர்ச்சிப் பக்கங்கள்!
அவற்றை பரிவுடன் வாசித்து புரிந்து கொள்ளும் ஆண்களாலேயே
பெண் மனதின் அன்பை வெல்ல முடிகின்றது!

----------------------------------------------------------------------------



ஆழ்மனதின் உணர்ச்சிகளை வௌிப்படுத்த வார்த்தைகள் தேவையில்லை. கண்ணீரே போதும்!

------------------------------------------------------------------------------


இதயத்தை திறந்து வைக்கும்போதுதான் பிறரது உண்மையான அன்பை உணர முடிகின்றது..உண்மையான அன்பானது குற்றத்தையும், குறைகளையும் ஆராயாமல் அவற்றைக் களைந்து விடும்...



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!