About Me

2014/07/25

முகநூல் துளிகள்



நாம் ஜெயித்துக் கொண்டே இருக்க....
உற்சாக மனம் போதும்..

அப்பொழுதுதான்...

நிழல்களை நிஜமாக்கும் கற்பனை நம் அறிவுடன் சேர்ந்து நம்மை உற்சாகமாய் இயங்க வைக்கும். அவ் உற்சாக விழுதுகள் நம் வெற்றியைத் தாங்கும் தூண்கள்!

---------------------------------------------------------------------------------------

நம்பிக்கை பலருக்கு வெறும் எழுத்துக்களால் ஆன சொல்..

செய்வார் சிலர் ஏனோ தானோவென..
சிலரோ....
விதையிட்டவுடன் விளைச்சல் தேடுவார்!
சிலரோ.....
கடுகுச் செயலுக்கும் மலையெனத் திணறுவார்!

பலருக்கு ........
வாழ்க்கை கசந்து போவதற்குக் காரணம் நம்பிக்கையின்மையே!

உண்மையில்...

நம்பிக்கை என்பது நமது மனதை ஏவச் செய்யும் செயல்!
அதனால் நம்பிக்கை கொண்டோர் தம் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளையும் இலேசில் கண்டுபிடித்து விடுவார்கள்!

நம்பிக்கை நம்மை வாழ வைக்கும் சக்தி!
நம்புவோமாக!

-------------------------------------------------------------------------------


அழ வைக்கும் ஆயிரம் வார்த்தைகள்...
அன்பு செய்யும் வார்த்தைகள் முன்
தோற்று விடுகின்றன !
காற்றில் தன் சினத்தைக் கரைத்து!!

உண்மைதான்....

கண்ணீரையும் கரும்பாய் மாற்றும் சக்தி  இந்த அன்புக்குண்டு!
ஏனெனில்...
இந்த அன்பினை எப்பேதங்களும் தொட்டுப் பார்ப்பதில்லை!

அன்பாய் இருப்போர்...
இன்பத்தின் நீரூற்றில்
என்றுமே கலந்திருப்பார்
தம் வாழ்வில்!

-------------------------------------------------------------------------------------------


ஒருவர்...........

நமக்கு உடன்பாடில்லாத எந்த விடயங்களைக் கூறினாலும் ,முதலில் நாம் அவற்றை மறுத்து விடுகின்றோம்.

ஆனால்........

சற்று கண நேரச் சிந்தனையானது...

நம் மனதை முரண்பாட்டிலும் உடன்பாடு காண தயார்படுத்தி விடுகின்றது!

இதுதான் வாழ்க்கை!

தீயின் வெப்பம் பிரித்து குளிர் போக்கும் மனப்பக்குவம் நம்முள் இருக்கும் வரை, நம் வாழ்வும் சலித்துப் போவதில்லை!

-------------------------------------------------------------------------------------------



வௌிப்படையான பேச்சு உறவின் உறுதிப்பாடுதான்...
ஆனால்.....
அதனால் ஏற்படும் காயங்களையும், முரண்பாடுகளையும் கட்டுப்படுத்தும் சக்தி மௌனத்திற்கே உரியது!

நமக்கு உடன்பாடில்லாதவற்றை நம் உறவுகள், நண்பர்கள் வௌிப்படுத்தும் போது மௌனம்தான் சிறந்த முடிவாக இருக்கின்றது!

-------------------------------------------------------------------------------------------


பயம் என்பது பலவீனத்தின் வருடல்...
துணிவென்பது பலத்தின் விளைவு!

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்தப் பயமும் துணிவும்தான் மனதின் உச்சரிப்புக்களாகி அவர்களின் செயல்களுக்கு பின்னணியாகி விடுகின்றன!

மனசாட்சியோடு பலத்தைக் குலைக்கும் செயல் வீரன் சரித்திரமாகின்றான்...
பலவீனத்தில் தன்னைக் கரைத்து ஒதுங்கிக் கொள்பவன் காணாமற் போகின்றான்..!

துணிவே துணை..

எனவே நல்லவற்றை துணிந்து செய்யும்போது நம் வாழ்க்கையும் நமக்கு பணிந்து ஆரத்தழுவுகின்றது சந்தோசங்களுடன்!

------------------------------------------------------------------------------


அடுத்தவர் குறைகளைப் பற்றி பேசித் திரிவோர்
தன் நிறைவை ஏனோ மறுத்து விடுகின்றார்கள்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!