About Me

2014/07/26

இனவாதத் தீ

இனவாதம்.....!

மீண்டு மிங்கே
'பாவிகளால்'!

கலிமா மொழிவுகளை
சாத்தானிய தீ நாக்குகள்
விழுங்கும்

இந்நேரம்
ஈமானிய நெஞ்சங்களின் குருதிப் பிழம்புகள்
எம் விழிகளில்
கண்ணீர்க் கசிவுகளாய்
படிகின்றன

போர் எச்சங்களின் வடுக்கள்- இன்னும்
பாரெங்கும் காட்சியாய்
அலைகையில்
மீண்டும்
தாரோட்டுகளில்
ஜனாஸாக்களைக் குவித்து
இனவாதம் பேசும் மாக்களாய்
சில பெரும்பான்மைகள்!

நம்
அரசியல்வாதிகளோ....
சொகுசான சிம்மாசனங்களின் இருக்கையை
வெறும்
செவ்விகளால்  மாத்திரம்
நிரப்பிக் கொண்டிருக்க

இங்கே
இலங்கையில்
மானுடம் ஏலம் போகின்றது
மாசடைந்த வன்முறைகளால்!

இதோ
மீண்டுமொரு இன அழிப்பு

காடையர்களின்
தீ வைப்பும்
படுகொலைகளுமாய்
அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன

அழுத்கம
பேருவளையில்!

இம் மக்களின் துன்பம் போக்க
நம் மனங்கள்
இறைஞ்சட்டும் து ஆ க்களை
வல்லோனிடம்!

எங்கு அப்பாவிகள் அழிக்கப்படுகின்றார்களோ. அங்கு வன்முறைகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுகின்றது! எந்த இனமானாலும் அப்பாவிகளின் துயரமும் சாபமும் துன்பப்படுத்துவோரின் இருப்பையே அழித்துவிடும் என்பது காலம் கற்றுத் தந்த உண்மை!

எனவே

வன்முறையற்ற சமுதாயம்
இன்றைய வாழ்க்கையின் எதிர்பார்ப்பு!


- Jancy Caffoor-
25.07.2014

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!