About Me

2014/07/25

என்னிலுன்னை




அன்பு கொண்டவன் ஈன்றான்
அழகான அன்பளிப்பொன்று!
ரோசா சாறு பிழிந்த சுடிதாரில்
ராசா அவனன்பு கண்டு.....
ரம்ழானும் உவகையில் தானின்று!

ஆழிச் சார லோசையினில்
வழியொன்று திறக்கின்ற தென் கரையில்!
அழகான வுன் சிரிப்பை
ஔிந்து நின்று ரசிக்கின்றேன்!

மெலிந்து நீதான் போனாலென்ன
வலி தீர்க்கு முன்தன் னன்பு........
பலம்தான் எனக்கும் - உன்
குரல் பிழியும் ரசனை யென்
இராக்களின் பனித்தூறல்தான்!

இறைவா...
குறையில்லா எங்கள் அன்பு- இக்
குவனியில் குதுகலிக்க
அருள் தந்து விடு......

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!