About Me

2020/08/30

தரணியெல்லாம் எங்கள் தாயகமாம்

 விழுமியத்தின் விழுதுகள் தாங்கட்டும் பூமியை

அழுகையின் ஓசைகள் கரையட்டும் ஆழிக்குள்

எழுகின்ற அதிர்வுக்குள் அமைதி ஒலிக்கட்டும்

வாழுகின்ற வாழ்வினை நிம்மதியே ஆளட்டும்


ஒரே வானம் ஒன்றித்த பூமிக்குள்

ஒருங்கிசையும் சிந்தனைகளே ஏற்றத்தினுள் உயிர்க்கும்

வருங்காலம் சிறந்திடவே துறந்திடலாம் சுயநலத்தை

விரும்பிடுவார் யாவரும் அன்பின் வருடலை  


பேதங்களும் வாதங்களும் முரண்பாடுகளாய் வெடிக்கையில்

பேரிடியாய் ஓலமிடும் இனவாதத்தின் அக்கினியே

சாந்தியில்லா நெறிமுறை அறுக்கும் தலைமுறைகளை

வெந்தணலில் அகத்தினையும் முழுதாகப் போர்த்திடுமே


வேதங்கள் மொழிவது மேன்மையான வாழ்வையே

வேதனைகளும் விரண்டோட மனிதமாக மாறிடலாம்

வேற்றுமையேது தரணியெல்லாம் எங்கள் தாயகமாம்


ஜன்ஸி கபூர் - 30.08.2020



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!