About Me

2020/08/30

விடையில்லாத முள்மரம்

ஏடெடுக்கா கரத்தினில் வன்மத்தின் ரேகைகள்/

ஏழ்மையின் ஏக்கத்துக்குள் எரிமலைப் பூக்கள்/

தோற்றுப்போன வாழ்வில் தொடாத வசந்தங்களும்/

பற்று வைத்ததோ பாலகன் வாழ்வினில்/


இனிமையான வாழ்வோ இரும்புத் திரைக்குள்/

தனிமைக்குள் தள்ளாடுதே அறியாத வயதும்/

கனிந்திட்ட மனதுக்குள் கறைகளே குற்றங்களாய்/

மனிதம் துறந்ததனால் மலராதே எதிர்காலமும்/


விழி நீருக்குள் வீழ்ந்திட்ட கனவெல்லாம்/

அழிகின்றனவே நெறி துறக்கும் வாழ்வினால்/

வழி தவறுகையில் சட்டம்தான் பிணைத்திடும்/

பழித்திடுமே வையகமும் பாதகங்களை நினைவுறுத்தியே/


பாசமில்லா மாந்தரும் வகுத்திட்ட விதியால்/

வாசனை அறியாத பூவோ வெயிலுக்குள்/

பழகிய நண்பரும் பழக்கிய பாதகங்களால்/

அழகிய வாழ்வும் சிதறுதே வெறுமையில்/


ஜன்ஸி கபூர் 



  •  

     

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!