About Me

2020/08/30

திருக்குறள் - 642

 ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு   


உதட்டின் வார்த்தைகளே உள்ளத்தின் கண்ணாடி

உரைத்திடும் நற்சொற்கள் நன்மையில் கூடிடுமே

வருந்திடுமே மனமும் நாசச் சொற்களால்

அருமையான வாழ்விற்கு விழிப்பான சொல்லாடல்


புண்படுத்தும் நெஞ்சினை பண்படுத்தும் நல்வார்த்தை 

துண்டாடுமே மனதினையும் தீதான பேச்சொலியே

பண்பாடு காத்திடுமே சிந்தனை உரையாடல்

எண்ணம்போல் வாழ்ந்திடவே வேண்டுமே பயனுரைகள் 


பேசும் ஆற்றலால் பெருமைகள் தேடி

பேணிடுவோம் நாவினை மகிழ்வும் கோடி


ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!