About Me

2020/08/30

தேநீரும் நானும்

உரு மாறும் மேகங்களின் ஊற்றால்/

திரு மேனிக்குள் நடுக்கப் புரட்சி/

தருகிறாள் இல்லாள் சூடான தேநீர்/

விருப்பின் விருந்தாய் ஊறுகின்றது நாவுக்குள்/

பருகும் பானம் படர்கின்றது உணர்வினுள்/

 

உறைக்கின்ற வடையும் உற்சாகத்தில் புரள/

குறைகின்றதே தேநீரும் வெறுமைக்குள் மனசும்/

மறைகின்ற நீராவிக்குள் உறைகின்றதே சுவாசமும்/

நிறைந்திருந்த சோர்வும் அறுந்தோடுகிறது தானாய்/

புத்துணர்ச்சித் துள்ளலோடு அன்றைய பொழுதுகள்/


ஜன்ஸி கபூர்- 30.0/8.2020




 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!