About Me

2020/08/31

நெகிழிப் பூதம்

மாற்றம் வேண்டுமே நெகிழிப் பாவனையில்

சீற்றத்தினில் இயற்கையும் சிக்காமல் காக்கவே

காற்றினில் நழுவுகின்ற மாசினை சுவாசிக்கையில்

பற்றுதே மரணமும் பறக்குதே ஆரோக்கியமும்

ஏற்றது நமக்கு உக்கும் துணிப்பைகளே

கற்றிடுவோம் பண்பாட்டை காத்திடலாம் நானிலத்தை 


ஜன்ஸி கபூர் - 31.08.2020




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!