About Me

2020/08/31

இயற்கையின் சீற்றம்

 


மேக மழையின் மோக எழுச்சி

தேகமும் நனைந்திட  விளைச்சலாய் வெள்ளமே

வேக நீரின் ஊற்றினில் கரைந்திடும்

பாதக வாழ்வுக்குள் தாழ்ந்திடுமே பாரே


ஆழிக்குள் திமிரெடுக்கும் பேரலைப் புரட்சியும்

அழித்திடுமே வாழிடம் அண்டத்தின் சுவடுகளையும்

வெட்டிடும் மின்னலும் வேரறுக்கும் பசுமையை

திட்டிடுமோ இயற்கையும் தீங்கிழைத்த மாந்தருக்கே


பனிப்பூக்கள் சிதறுகையில் உருகிடுதோ தென்றலும்

தனிப் பாதையோரம் பனியின் ஆவேசம்

மனித வேட்கையினில் மாறியதோ இயற்கையும்

மறந்த விழுமியம் அழிவின் உச்சத்தில்


நெகிழி தடையின்மை வருத்திடும் ஓசோனை

நெஞ்சமும் பிழிந்தூற்றும் இயற்கைச் சீற்றங்களை

நெருடட்டும் மண்வாசனையும் நெடுங்கால வாழ்வுக்கே

பெருந்துன்பம் வேண்டாமே என்றைக்கும் தலைமுறையினருக்கும்


ஜன்ஸி கபூர் 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!