About Me

2020/08/31

நீரோடு அலமரும் கண்

காதல் மனதில் உறைந்திட்ட மன்னவன்/

காத்திருக்க வைத்தான் கடலலைகள் தாண்டி/

சொத்தாய் நானிருக்க பொருளீட்டப் போனான்/

சொந்தம் என்னுள்ளே சோகத்தின் பேரலையே/


கண்ணே கலங்காதே காரினுள் வந்திடுவேன்/

என்றானே தலைவனும் ஏக்கத்தில் மனதாட/

வெய்யோன் இளைப்பாற பசுமையான முல்லையும்/ 

வெட்க முடைத்து மலர்ச்சியினில் சிந்திய/


நறுமணத்தில் வண்டுகள் மயங்கின காதலில்/

தேனின் களிப்பினில் மகிழ்ந்தாடின கூடலில்/

நானோ பிரிவின் தவிப்பினில் துடிக்கிறேன்/ 

வெம்மை தணிந்த மாலைக் குளிர்ச்சியினில்/


கொண்டல்  கூடியே கொட்டிய பெருமழையும்/

எந்தன் கண்ணிலே காட்சியாய் ஊறுகையில்/

விழிநீரும் வடிகின்றதே காரிலும் காணாத/

அழகிய தலைவனின் திருவுருவம் கண்ணிலே/

வெம்மினேன் நானும் தொலைவிலோ மன்னவன்/


சிந்திய மழையினில் கண்ணாளன் நினைவெழ/

சிந்துகின்றேன் கண்ணீரை விழிக்குள்ளும் காரே/

எந்தன் துயர் எனையே வாட்டுதே/

அன்புத் தோழியே அல்லலுறுகின்றதே உயிரும்/

என்றாளே பிரிவின் வலியில் தலைவி/


ஜன்ஸி கபூர் - 30.08.2020




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!