இயற்கை செழிப்பினை விழிகளும் ஏந்திட
இதயமும் மகிழுதே பசுமையின் ஆட்சியில்
விளைந்திட்ட வயலின் உழைப்பெல்லாம் முத்தாக
விருப்பினில் வேளான்மை தருகின்றதே மனநிறைவை
உரல் இடிக்கையில் உளத்திற்கும் ஆரோக்கியமே
உடல் உழைப்பினில் மாசுக்கள் இல்லையே
கூட்டுறவின் குதூகலம் கிராமத்தின் எழிலாகும்
கூடிடுமா ஒளிமயமாக்கம் ஓவியம்போல் நிசத்தினிலே
ஜன்ஸி கபூர் - 31.08.2020

No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!