About Me

2021/04/25

ஒவ்வொரு விடியலும்

 

ஒவ்வொரு விடியலும் எல்லோருக்கும் நம்பிக்கைக்கான ஒளி விளக்குதான். மனதிலே தேங்கிக் கிடக்கின்ற நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள் இன்றாவது நிறைவேறுமென மீள எதிர்பார்த்து காத்திருக்க வைக்கின்றது. நினைத்த எண்ணங்கள் மீள ஏமாற்றமாகி சோர்ந்து விழுகையில் நாளைய விடியலாவது விடை தருமென மீள மனதில் புதிய நம்பிக்கையுடன் வாழ்தல் தோல்வியை வாழ்விலிருந்து நகர்த்தி விடுகின்றது.

இலவசமாகக் கிடைக்கின்ற கற்பனைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் காலம் இலேசில் பதில் தருவதில்லை. சோர்வான மனங்கள் சோபை இழக்கையில் விரக்தி நம்மைச் சூழ்ந்து விடுகின்றது. எனவே கிடைக்கின்ற தோல்விகளை உதிர்க்கின்ற வரையில் நம்பிக்கையுடன் வாழ்வோம்.

Jancy Caffoor - 25.4.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!