About Me

2021/05/01

நித்தம் உன் ஞாபகம்

 

விழிகளின் ஈர்ப்பால் கலந்த காதல்/

தழுவுகின்றதே நெஞ்சில் ஏக்கமும் சுமந்தே/

மெல்லிடை தழுவும் சேலை முடிச்சுள்/

ஒழிந்த வாலிபமும் குறும்பாச் சிரிக்குதே/


உன் கொலுசின் சத்தத்தில் உயிர்க்கும் /

பாதச் சுவடுகளும் பரவுதே உன்னோடு/

ஆசைகள் முடிந்த அத்தான் மனதுள்/

ஏக்கத்தின் ஓசைகள் வெடிக்குதே இமயமாக/


காமம் கிள்ளும் நறுமணக் கனாக்களில்/

உன் வாசம் உணர்வுள் மலருதே/

தேகம் சிலிர்க்க செந்நிற உதட்டின்/

மோக முத்தம் கற்பனைக்குள் உறையுதே/


கன்னக் கதுப்பில் செதுக்கிய வெட்கம்/

பக்கம் வருகையில் திரைக்குள் மறையுதே/

வானவில்லும் மையங் கொள்ளும் உன்னை/

வசந்தமும் மெல்லத் தொட்டுச் செல்லுதே/


உந்தன் புன்னகைச் சாரலில் நனைகையில்/

மெல்ல அழியுதே எந்தன் தனிமையும்/

வாழ்வின் முகவுரையாக உன்னை எழுதுகையில்/

உதிர்கின்றன சோகங்களும் உலகின் காலடியில்/


உள்ளத்தின் நினைவாக நீயும் நிரம்புகையில்/

மெல்லக் கரைகின்றதே சூழ்ந்திடும் தனிமை/

உறக்கத்திலும் உறங்காத உன்னோடு பயணிக்கையில்/

உன் ஞாபகமே மொழியாகிப் போகின்றதே/


ஜன்ஸி கபூர் - 01.05.2021



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!